22 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
யாதும் அறியாமல் *ஆகுலங்கள் செய்கின்றார்; மாசகற்றி வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கோர் ஆசையுற்று நல்ல அறநெறியில் நிற்கவிலை; மாந்தர் எனைமறந்தார் வாய்மைக் குறள்மறந்தார் போந்த நெறியெல்லாம் போய்ப்புகுந்தார்; இன்னுங்கேள் *இம்மைப் பயன்துய்க்க எண்ணும் மனிதருக்குச் செம்மைப் படுத்திச் சீரான நன்னெறிகள் எத்துணையோ சொன்னேன் எனினுமவர் கேட்டிலராய்ப் பித்தரைப்போல் இவ்வுலகில் பேதுற் றலைகின்றார்; பத்துக் குறளால் பகவன் இயல்பனைத்தும் நத்தும் படியுரைத்தேன் நல்ல நெறிவகுத்தேன் எள்ளளவும் அந்நெறியை ஏற்று நடக்காமல் பிள்ளைகள்போல் இன்னும் பிழைபடவே செய்கின்றார்; கல்லாலும் செம்பாலும் காசுமணிப் பொன்னாலும் இல்லா உருவம் இறைவனுக்குத் தந்தார் சிலையாகச் செய்தார் சிறப்பெடுத்துப் போற்றும் கலையாகச் செய்தார் கடவுட்பேர் தந்தார் நிலையாகக் கோவிலுக்குள் நிற்கவைத்தார்; ஆனால் விலையாக ஊர்கடத்தும் வேலையிலும் ஈடுபட்டார்; உள்ளத்தில் ஆண்டவனை ஓர்சிறிதும் எண்ணாமல் கள்ளத் தனமாகக் கடல்கடத்திச் செல்கின்றார்; பாயிரத்தின் முன் சொன்ன பண்பை மறந்துவிட் டாயிரந் தெய்வங்கள் ஆக்கிப் படைத்துத் திருடிப் பிழைக்க திருநீறும் பூசிக் குருடர் உலகமெனக் கூத்தாட்டம் ஆடுகின்றார்; மக்கள் படுதுயரை மாநிலத்துக் கண்டுணரத் தக்க அறிவிலராய்த் தாம் மட்டும் வாழ்கின்றார்; மற்றோரை வாழ்வித்துத் தாமுமிங்கு வாழுமனம் அற்றோர்பால் நெஞ்சுருகும் அன்புநெறி காண்பதெங்கே? அன்புநெறி இல்லையெனில் ஆருயிரைத் தன்னுயிர்போல் எண்ணும் அருள்நெறிதான் எங்கே தழைத்துவரும்? நல்வழிகள் காட்டவரும் நாளிதழ்கள் மங்கையரை
*இம்மைப் பயன் - இவ்வுலக இன்பம் |