பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்205

மண்ணாளும் உரிமையினைக் கலைத்த போதும்
       மனைமக்கள் தமக்கிடர்கள் விளைத்த போதும்
எண்ணாத சிறைக்கூடம் வதைத்த போதும்
       எந்நாளும் உழைத்திருப்போம் வெற்றி கொள்வோம்.

அடிவயிற்றில் எமைமிதித்துக் கொன்ற போதும்
       அவர்காட்டும் வழியில்தான் செல்வோம் நாங்கள்
அடிபட்டு மிதிபட்டுத் துயர்கள் உற்றும்
       அயராமல் உழைத்திடுவோம்; இரண்டு வண்ணக்
கொடிகட்டி அதன்நிழலில் தொடர்ந்து நின்று
       குறிக்கோளை நோக்கித்தான் பயணம் செய்வோம்;
மடியட்டும் எமதுயிர்கள் அஞ்ச மாட்டோம்
       மறிக்கட்டும் எமைப்பகைகள் விலக்கிச் செல்வோம்.

தம்பிகரு ணாநிதியும் எம்மோ டுள்ளார்;
       தலைமகனார் வழியில்தான் செல்லு கின்றார்;
வெம்பிஎழும் புலிமறவர் இங்கே வுள்ளார்;
       வீரமகன் வழியில்தான் செல்லு கின்றோம்;
கும்பியினை வளர்ப்பவர்கள் குரைத்து விட்டால்
       கொள்கைவழித் தொடராமல் நின்றா போவோம்
நம்பிவரும் நல்லவர்கள் இங்கே வுள்ளார்;
       நம்அண்ணன் அமைத்தவழி தொடர்ந்து செல்வோம்.

அண்ணாவைப் போற்றுவது கடமை என்றால்
       அவர்தம்பி கலைஞரையும் போற்ற வேண்டும்;
அண்ணாவைத் தலைவரென ஏற்றுக் கொண்டால்
       அவர்தம்பி கலைஞரையும் ஏற்க வேண்டும்;
அண்ணாவின் சொல்லெல்லாம் மதிப்ப தென்றால்
       அவர்தம்பி கலைஞர்மொழி மதிக்க வேண்டும்
அண்ணாவின் கொள்கைவழி நடப்ப தென்றால்
       அவர்தம்பி கலைஞர்வழி நடக்க வேண்டும்.

அண்ணா பிறந்த நாள் விழா.
சென்னை
17.9.1978