பக்கம் எண் :

206கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

39
வெற்றி மலர் சூடுங்கள்!

நம்மை வளர்த்துவிட்ட நல்லவன் தாயுளத்தை
இம்மா நிலத்தே எவரிடத்துங் கண்டதில்லை;
‘பண்பட்ட தம்பியராம் பன்னூற்றின் ஆயிரவர்
எண்ணிட்டுக் காட்ட இயலாரைச் சேர்த்தென்னைத்
தாயொருத்தி தன்வயிறு தாங்காத காரணத்தால்
போய்வயி றொவ்வொன்றும் புக்குப் பிறந்தோம்நாம்’
என்று மொழிந்தவன்றன் ஈடில்லாப் பண்புளத்தை
இன்று நினைத்தாலும் என்பெல்லாம் நெக்குருகும்;
நாட்டை வயமாக்கும் நாவல்லான், நற்றமிழை
ஏட்டில் எழுதிமெரு கேற்றும் எழுத்தாளன்,
நாடும் அரசியலை நன்காய்ந்த பேரறிஞன்,
வாடும் எளியோர்க்கு வாழ்வு தரவந்தோன்
நண்பாளன், பண்பாளன், நாடகத்துப் பேராசான்,
கண்போல வாய்த்தஒரு காஞ்சி புரத்தலைவன்
ஒன்றாலும் நம்அண்ணன் உள்ளம் மயங்கவில்லை;
மாறாட்டம் இல்லாமல் மக்கள் நலங்கருதிப்
போராட்டம் நூறு புரிந்தானைத் தன்னாட்டில்
ஏழை துயர்துடைக்க வெஞ்சிறைகள் ஏற்றானைக்
கோழை எனப்பழித்தான் கொள்கை சிறிதுமிலான்;
போராட்டம் என்றாலே போய்ப்பதுங்கும் குள்ளநரி
ஈரோட்டார் தந்தஅரி யேற்றைப் பழித்ததுகாண்;
அண்ணன் குடும்பத்தை அப்பிறவி ஏசிவந்த