பக்கம் எண் :

30கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

10
அறத்தின் வழிகாட்டி

வள்ளுவனை வழிகாட்டி என்று பாட
       வன்பாகக் கைகாட்டி விட்டார் நண்பர்;
தெள்ளுதமிழ் நாவலனை உளத்திற் கொண்டு
       சிந்தனையாம் பேருலகம் நோக்கிச் சென்றேன்;
துள்ளுநடை போடுகையில் வழியி ரண்டு
       தோன்றுவதைக் கண்டங்கே மலைத்து நின்றேன்;
தெள்ளியநல் வழிஎதுவோ? என்று நெஞ்சம்
       தெளியாமல் இருவழியும் நோக்கி நின்றேன்.

வடக்குவழி தெற்குவழி என்றி ரண்டுள்
       வடவழியில் புகத்துணிந்தேன் வாடைக் காற்று
நடுக்கியது மனம்வெறுத்துத் திரும்பி விட்டேன்;
       நல்வழியாம் தென்வழியில் நடந்து சென்றேன்;
நடக்கையிலே மணத்தோடு தென்றல் வந்து
       நலந்தரலால் புலமெல்லாம் மகிழக் கண்டேன்
கடக்களிறு போல்நடந்தேன்; அவ்வி டத்தே
       கலகலவென் றொருசிலர்தாம் சிரிக்கக் கேட்டேன்.

நடைநிறுத்தி அவர்தம்மை நோக்கி நின்றேன்;
       நன்கணிந்த திருநீறு குவிந்த கொண்டை
தடையின்றி வளர்ந்திருக்குந் தாடி மீசை
       தளதளத்த மார்பகத்தே பட்டை நூல்கள்
இடையிலொரு நீள்கச்சை இந்த வேடம்
       ஏற்றவரும், தலைமழித்துப் பட்டை நாமம்