உடையவரும், வடநாட்டுக் கொண்டை யிட்ட உடல்வலிமை கொண்டவரும் அங்கு நின்றார். நகைக்கின்ற பெரியீரே நீவி ரெல்லாம் நானறியப் புகல்வீரோ யாவிர் என்று? திகைக்கின்றேன் அருள்புரிக என்றேன்; ‘எம்மைத் தெரியாயோ? வள்ளுவர்தாம் நாங்கள்’ என்றார்; வகைக்கொருவர் நிற்கின்றார்; எத்து ணைப்பேர் வள்ளுவர்கள்? *என்றயிர்க்குங் காலை மற்றோர் நகைப்பொலியும் என்செவியிற் கேட்ட தங்கே நான்நின்றேன் அவரெல்லாம் மறைந்து விட்டார். நகைத்தவர்யார் எனவினவி நின்றேன்; ஆங்கே ‘நான்’ என்ற விடைகேட்டேன் உருவ மில்லை; ‘திகைக்காதே வள்ளுவன்நான், உன்றன் நெஞ்சுள் சிரிக்கின்றேன், என்னுருவங் காணாய் தம்பி, உகைத்தெழும்பும் உணர்வுடனே யாங்கு வந்தாய்? உன்விழைவு யா’தென்றான்; வணங்கி நின்று பகைப்புலத்தர் சூழ்ச்சிஎலாங் கடந்து வந்த பாவலனே உனையொன்று வேண்டு கின்றேன். காலமெலாந் துன்பங்கள் சூழ்ந்த போதும் கவலையிலா மனிதனென வாழ வேண்டும்; ஞாலமெலாம் ஆள்பவனே! தீமை ஒன்றும் நண்ணாமல் வாழ்வெல்லாம் இயங்க வேண்டும்; மேலவனே! வழிபுகல்வாய் என்றேன்; ‘தம்பி! மேதினியில் அறநூல்கள் காட்டு கின்ற சீலநெறி செல்வோhக்குக் கவலை யில்லை, சிறுமையில்லை என்றென்றுந் தீமை யில்லை.’
*அயிர்க்குங்கால் - ஐயப்படும் போது |