34 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
சிறப்பான தமிழ்மானங் காத்தல் வேண்டின் சிறந்ததடா இவ்வறப்போர்; செயலிற் காட்டு! உன்னினமும் தாய்மொழியும் நாடும் வாழ உயிரீய வேண்டுமடா; வயிற்றுச் சோறு தின்னுதற்கே வாழாதே! மான வாழ்வில் தீங்கொன்று புகுந்திடுமேல் வீரங் காட்டி மன்னவன்போல் இந்நாட்டில் வாழ்க’ என்று வழியுரைத்துப் போய்விட்டான்; எனது நாட்டின் துன்னிவரும் அறப்போர்க்கு வழியைக் காட்டித் துணிவளித்த வள்ளுவனை வாழ்த்து கின்றேன். திருக்குறட் கழகம், காரைக்குடி (1961) |