பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்37

எங்கள்திரு நாட்டின் எதிர்காலம் என்னாமோ?
வெந்தே உரிமை விழலாகிப் போய்விடுமோ?
அந்தோ! எனமயங்க அச்சச் சுவைதோன்றும்;
புக்க இருளைப் புறங்காணக் கீழ்வானில்
செக்கச் சிவந்துவரும் செங்கதிரைக் காணுவதால்
உள்ளங் களித்தே உவகைச் சுவைதோன்றும்
வெள்ளமென இன்பம் விளைந்து பெருக்கெடுக்கும்;
பாட்டுச் சுவையறிந்த பாரோரே நாம்வாழும்
நாட்டுச் சுவையறிவீர் நன்கு.

வள்ளுவர் பேரவை, சிவகங்கை

29.4.1962