42 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
13 வள்ளுவர் கண்ட உடைமைகள் மாடமொடு நீடுமதில் சூழ்ந்தி ருக்கும் மாமனைகள், விளைந்துவரு நன்செய் புன்செய், தேடரிய பெருஞ்செல்வம், மணியும் பொன்னும் தேர்ந்தெடுத்துச் செய்தஅணி கலன்க ளோடு மாடணியும் *சாகாடு, தொலைவி னின்று வந்திறங்கும் விலையுயர்ந்த ஊர்தி யின்னும் நாடதனில் எதையெதையோ உடைமை என்று நம்பியதைப் பெறுவதற்கே உழலு கின்றோம். இவற்றையெல்லாம் உடைமையென நம்பி **வெஃகி எவ்வகையாற் பெறுதுமெனச் சூழ்ந்து செய்யும் தவற்றையெலாஞ் சொல்வதெனில் யாரால் ஒல்லும்? தந்திரங்கள் வஞ்சனைகள் பொய்ம்மை இன்னும் எவற்றையெலாம் செய்தேனும் வளத்தில் வாழ ஏங்குகிறோம் பிறருயிரை வாங்கு கின்றோம் **அவத்தைஎலாம் நாணாமற் செய்து நின்றே அலைகின்றோம் ‡மலைகின்றோம் இனத்தா ரோடு. கொடுமைபல ¶செய்தவற்றைப் பெற்ற பின்பும் கொண்டபொருள் போதுமெனும் எண்ணம் நெஞ்சிற் கடுகளவும் படுவதுண்டோ? இல்லை யில்லை; கரைகாணா ஆசையினால் இன்னும் யாரைப்
*சாகாடு - வண்டி, **வெஃகி - விரும்பி ***அவத்தை - துன்பம் ‡மலைகின்றோம் - சண்டையிடுகின்றோம் ¶செய்தவற்றை - செய்து + அவற்றை |