பக்கம் எண் :

48கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

புகழ்ப்பேறும் பொருட்பேறுங் கருதி வஞ்சப்
       பொய்ம்மொழிகள் பலபேசி நடித்துக் காட்டி
மிகப்பேணத் தகுமானம் விடுத்துப் பின்னர்
       மேதினியில் ஊனோம்பி வாழும் வாழ்க்கை
உகப்பான தெனவுரைக்க ஒவ்வார் மேலோர்;
       உயிர்விடுத்தும் மானத்தைக் காக்கும் வாழ்வே
பகுத்தாயும் அறிவுடையார் உயர்ந்த தென்பர்;
       பாழ்வயிற்றைக் காப்பதெனில் நாயுங் காக்கும்.

ஒருமானங் காப்பதுதான் முறைமை என்றால்
       உலகத்தில் வருமானம் போமே என்பார்;
திரிமானஞ் செய்திருந்து பதவிக் காகத்
       தீமைஎலாம் செய்துயர்வார்; கொள்கை தன்னிற்
சரியான பிடிமானம் இல்லார் ஒன்றில்
       தங்காமற் கிளைதோறுந் தாவித் தாவி
வருவார்தம் வாழ்க்கையிலே மானம் எங்கே
       மறைந்துளதென் றாய்ந்திடினும் காண்ப துண்டோ?

சிக்கெடுத்து நெய்தடவி மலர்கள் சூட்டிச்
       செய்ம்முறைகள் பலசெய்து பேணிக் காத்துத்
தக்கபடி வளர்க்கின்றாய் கூந்தல் தன்னை;
       தலைமகளே அதுதலையின் இழிந்து விட்டால்
மிக்கதொரு முயற்சியினால் வளர்த்த தென்று
       மீண்டுமதைப் போற்றுவையோ? சீசீ என்று
பக்கலிலே எறிந்திடுவை மானந் தாழ்ந்த
       பதர்மனிதன் நிலையுமது போல்வ தென்றேன்.

‘நெருநலொரு மணத்தைலம் வாங்கி வந்தேன்
       நெடுங்கூந்தல் அடர்ந்துவரும் ஆசை யாலே