பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்5

நீந்துவாரும் இன்பம் மாந்திக் களிப்பர். மூழ்கி எழுவார், உயரிய பொருள்கள் பெற்றுத் துய்த்தலும் ஆகும்.

இதில் இன்பங்காண விழைவார்க்கு ஓரளவேனும் மொழிப் பயிற்சியும், நூற் பயிற்சியும் வேண்டப்படுவனவாம். பயிற்சியில்லார் எதிற்றான் இன்பங்காண முடியும்! ஆதலின் பயில்க! பயன் பெறுக!

அன்புள்ள

முடியரசன்