பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்51

15
குடும்பமும் குறளும்

வையகம் உய்ய வந்ததோர் தலைமகன்
பொய்யா மொழிஎனப் புகழ்பெறும் வள்ளுவன்
மாந்தர் வாழும் வழியெலாந் தொகுத்துத்
தீந்தமிழ்ப் பாட்டால் திருக்குறள் தந்தனன்;
அந்தநன் னூலை அழகிய பதிப்பில்
தந்து மகிழ்ந்தோம்; தங்கத் தகட்டில்
எழுதிக் களித்தோம்; ஏனைய மொழிகளில்
தழுவிப் பெயர்த்துத் தலைநிமிர்ந் திருந்தோம்;
ஆண்டெலாங் கூடி அதன்புகழ் பாடி
ஈண்டிய புகழை எய்தினோம்; ஆனால்
கொஞ்சு தமிழிற் கூறிய நெறிகளை
நெஞ்சத் தகட்டில் நிலைபெற எழுதிலோம்;
வாழ்க்கைத் துணைநூல் வள்ளுவன் தந்தும்
பாழ்த்த நெறியில் படரவே விழைந்தோம்;
கண்ணிலாக் குருடன் கைவிளக் கிருப்பினும்
என்ன பயனை எய்துவன்? அதுபோல்
அறிவிலா நம்மிடம் அருங்குறள் இருந்தும்
பெறுபயன் ஒன்றும் பெற்றிலோம் கற்றிலோம்;
குடும்பம் நடத்திடக் கொஞ்சமுங் கற்றிலோம்
படுந்துயர் ஒன்றே பாரினில் கண்டோம்;
நல்லதோர் குடும்பம் நடத்திடும் நெறிகள்