பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்55

17
வாழ்க்கைக்குத் தலைவன்

உள்ளம் நினைத்ததை ஓரா தியற்றும்
பள்ளிப் பருவம், பதினா றகவை;
எண்ணக் குதிரையில் ஏறித் திரிந்து
மண்ணில் விண்ணின் மகிழ்ச்சியைக் கண்டு
பண்ணும் கூத்தும் நுகரும் பருவம்;
தவறுகள் செய்தும் தருக்குடன் அலைந்தும்
கவலையே யின்றிக் களிப்புறுங் காலம்;
இளமைத் துடிப்பில் இதுதான் வாழ்வென
உளமதிற் கருதி ஒழுகினேன்; அந்நாள்
ஓதும் பொழுதில் ஒருநூல தனுள்
தீதிலா ஒருவரி தெரிதரக் கண்டேன்;
ஒளிநிறை வடிவினன் ஒருவன் ஆங்கே
தெளிமுகங் காட்டிச் சிரித்தனன் நோக்கி
‘இளையோய் உலகில் இயற்றுக அறம்’ என
அளிமிகு மொழியால் அறைந்தனன் என்பால்;
அறஞ்செய் பருவமும் அவ்வறம் இயற்றிட
உறுபொருட் பெருக்கமும் உற்றே னல்லேன்
எவ்வணம் நல்லறம் இயற்றிட வல்லேன்?
செவ்விதின் உரைஎனச், செப்பினன் மறுமொழி:
‘மனத்துக் கண்ணுறும் மாசுகள் அகற்றின்
அனைத்தறன் இதனை ஆக்குக’ என்றனன்;