பக்கம் எண் :

56கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

இனியநல் நெறியதாம் எளியநல் முறையதாம்
இனிஅது செய்வேன் எனநான் முயன்றேன்
அன்றே என்மன மாசுகள் அகன்றன
நன்றே மொழிந்த நாவலன் வாழிய!
இன்னுஞ் சிலமொழி இசைத்தனன் என்பால்;
‘ஏதிலார் குற்றம் எடுத்தெடுத் தியம்பித்
தீதுகள் சேர்க்கத் தெரிந்தனை நின்பாற்
சேர்ந்துள குற்றம் தேர்ந்துணர் பெற்றிமை
பெற்றா யல்லை, பெற்றனை யாயின்
உற்றொரு தீதும் உனைவருத் தாதே’
என்றவன் உரைமொழி ஏற்றது முதலா
ஒன்றிய குற்றம் ஒன்றா தொழித்தேன்;
உள்ளத் தூய்மையும் உயர்பெருந் தெளிவும்
தெள்ளத் தெளியத் தெரித்தனன் அதனால்
அவனே தலைவன் அவற்குநான் அடிமை;
தவமே செய்தேன் தலைவனைப் பெற்றேன்;
கற்கும் பருவங் கடந்தேன் கட்டெழில்
நிற்கும் பருவம் நெருங்கிய தென்னை;
மங்கை ஒருத்தி மாலை சூட்டிடப்
பொங்கும் இன்பப் புத்துல கதனில்
உறவைப் பெருக்கும் ஒருநெறி புகுந்து
நிலவுப் பயன்கொள நினைந்ததென் மனனே;
மங்கையர் இன்பம் மாபெருந் துன்பம்
எங்கும் இடர்தரும் இருளுல கதுவாம்
துறவைப் பெருக்கித் துயரின் நீங்கி
இறவாப் பெருநெறி எய்துக’ என்றொரு
குரலுங் கேட்டது குழம்பிய தென்மனம்;
உரவோன் மனமுவந் துலகுக் குணர்த்தும்