பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்7

1
முப்பால் அமுது

மூவாப் புகழ் கொண்ட முப்பாற் சிறப்பை ஒரு
நாவால் தொகுத்துரைக்க நாம்முனைதல் - மேல்வானைக்
கையால் முழம்போட்டுக் காட்ட நினைப்பதுவாம்
ஐயா அளந்துரைப்பார் ஆர்?

நல்ல அறமிருக்கும் நாடும் பொருளிருக்கும்
சொல்லரிய இன்பச் சுவையிருக்கும் - வெல்லரிய
முப்பால் அமுதருந்தி மொய்ம்புபெற வாரீரோ
எப்பாலுஞ் செல்லேல் இனி.

31.5.1969