பக்கம் எண் :

70கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

அஞ்சாப் படையங்குத் துஞ்சாது காவல்செய,
நான்குபுறம் வேலியென நன்றே அரணமைத்துப்
பாங்குபெறும் நல்லறத்தைப் பாய்ச்சி வளர்த்தோம்பி
நட்பாம் உரமிட்டு நன்குவிளை கூழதனால்
கொட்பா திருக்கக் குடியோம்பும் காராளன்;
செப்பும் எழுத்தெல்லாம் சேரும் அசைஎல்லாம்
ஒப்பில் புலவனவன் ஓதுசீர் எல்லாம்
அடியெடுத்து வைத்தால் அறநெறியில் வைக்கும்
தொடையடுத்த பாவெல்லாம் தூய அறமணக்கும்;
காமக் கடும்புனலை நீந்திக் கரைகாண
ஏமப் புணையாக இல்லறத்தைச் சொல்லிவைத்தான்;
சொல்லாப் பொருளில்லை சொன்ன பொருளிலெலாம்
இல்லா அறமில்லை எல்லாம் அவனுரைத்தான்;
ஆசான் மொழிந்த அறநெறிகள் கேட்டபினும்
பேசா திருக்கின்றோம் பேணாமல் அந்நெறியை;
வள்ளுவத்துப் பேராசான் வையப் பெரும்புலவன்
உள்ளத்தால் நாமுணர ஓதிவைத்தான் செம்பொருளை;
பொல்லாங்கை நீக்கிப் புவியோர் அறிவுபெற
எல்லாரும் ஏத்தும் இறைநெறியைக் கற்பித்தான்;
ஆனாலும் அந்நெறியை ஆய்ந்துரைத்த செம்பொருளைக்
காணா தலைகின்றோம் கண்மூடிக் கெட்டழிந்தோம்;
எல்லாருங் கொண்டொழுகற் கேற்ற நெறிவிடுத்துப்
பொல்லா நெறிபுகுந்து புந்தி யிழந்தோம்;
அரனென் றொருகடவுள் ஆனாலும் செய்யும்
அறனை மறந்தே அலைதலன்றி யாதுகண்டோம்?
மாலென்றோம் அன்னவனை மாயன் என அழைத்தோம்
மால்கொண் டுழல்கின்றேம் மாயங்கள் செய்கின்றோம்;
புத்தன் எனமொழிவோம் புத்தி தனையிழந்து