பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்73

சிலைவடித்த திருவுருவில் நிலைத்து நிற்கும்
       சிந்தனையிற் பெரியாரை, நுழையும் நுண்மாண்
புலமிகுத்த வள்ளுவரைத் தில்லிக் குள்ளே
       புகழ்பரவக் குடியேற்றி வைத்தோர் வாழ்க.

தலைவைத்த பனியுறையும் மலையின் மீது
       தமிழ்மாந்தர் மறங்காட்ட நாணிற் பூட்டும்
சிலைவைத்தார் அன்றிருந்தோர்; உலகுக் கெல்லாம்
       செந்தமிழின் அறங்காட்ட வள்ளு வற்குச்
சிலைவைத்தார் இன்றிருப்போர்; உலகம் உய்யச்
       சிந்திக்கும் பேராசான் சிலையை நாட்டி
நிலைவைத்தார் தமிழ்த்தாயின் கோவி லுக்கு;
       நெஞ்சத்துக் களிப்பேறி வாழ்த்து கின்றேன்.