பக்கம் எண் :

74கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

22
வள்ளுவர் வழி

கார்மேகம் நெடுவானில் சூழும் போது
       கானமயில் தோகைவிரித் தாடல் செய்யும்;
கூர்வேனிற் பருவநிலை வந்தால் எங்கும்
       கூவுகிற இசைக்குயில்கள் பாடல் செய்யும்;
நீர்சூழும் பொழுதத்துக் குளத்தில் வாழும்
       நெடுங்கயல்கள் துள்ளிவிளை யாடும் ஓடும்
பார்மகிழ எழிற்கலைகள் தோன்ற வேண்டின்
       பண்பட்ட சூழ்நிலைகள் வாய்க்க வேண்டும்.

ஊர்வாழச் சீர்பாடும் கவிஞன் வாழ்வில்
       உவகைஎனும் தண்முகில்கள் சூழ்ந்து நின்றால்,
*ஏர்வாழும் இளவேனிற் பருவந் தோன்றி
       இன்பமெனும் இளந்தென்றல் வீசிச் சென்றால்
பேர்வாழும் அவன்நெஞ்சில் உணர்ச்சி வெள்ளம்
       பெருக்கெடுக்கும்; கலையுணர்வும் ஓங்கி நிற்கும்;
பார்வாழ வழிபுகல்வான்; தோகை கொண்ட
       பச்சைமயில் போலாவான்; குயிலும் ஆவான்.

மாறுபட்ட சூழ்நிலையால் சோர்வும் உற்று
       மதிமயங்கி மனம்கலங்கி நிற்கும் போது
வீறுபெற்ற செயலாளர் என்பால் வந்து
       விழாவரங்கில் பாட்டரங்கத் தலைமை ஏற்கக்


*ஏர்வாழும் - அழகு பொருந்திய