வாய்ந்திடும் நன்றி யிங்கே வளர்ந்தது கோவி லாக. பாழ்பட்டுக் கிடக்கும் நெஞ்சம் பண்படக் குறளைத் தந்து வாழ்வுக்கு நெறிகள் ஓதும் வள்ளுவன் கோட்டம் காணப் பாழ்பட்டுக் கிடந்த ஏரிப் பகுதியைப் பண்ப டுத்தித் தாழ்வுற்ற தரையை ஏற்றித் தந்தனன் கோவி லாக. நூற்றினும் மேலார் சிற்ப நூலினில் வல்லார் கூடிச் சோற்றையும் மறந்து கண்கள் துயில்வதும் மறந்து தங்கள் ஆற்றலைப் படைத்துக் காட்ட அவருளி எழுப்பும் ஓசை காற்றிலே மிதந்து வந்து களிப்புற இசைத்த தங்கே. முற்றியே நெஞ்சில் தோன்றி முதிர்ந்திடும் கலைஞர் ஆசை, சிற்றுளி செதுக்கும் ஓசை சேர்ந்தெலாம் ஒன்றாக் கூடிப் பெற்றதங் குருவம் ஒன்று பெரும்புகழ்க் கோட்ட மாக நற்றமிழ் உள்ளம் வாழ்த்தி நாடெலாம் மகிழ்ந்த தன்று. |