27 உய்யுமோ தமிழர் நாடு? உயர்தனிச் செம்மை வாய்ந்த ஒருமொழி தமிழாம் எங்கள் உயிர்மொழி நிலையை என்றன் உளத்தினில் நினைந்த வண்ணம் வியர்வையின் கொடுமை மாற வீதியில் உலவி வந்தேன் அயர்விலன் ஒருவன் என்முன் அணுகினன் அவனை நோக்கி. உனக்கென வேதம் உண்டோ? உண்டெனில் அதன்பேர் என்ன? எனக்கதைத் தெளியச் சொல்வாய் எனத்தமிழ் மகனைக் கேட்டேன்; “மனத்துறும் வேதம் நான்கு வாய்த்துள; அவற்றின் பேரோ இனித்திடும் இருக்கு சாமம் எசுர்அதர் வணமே” என்றான். மற்றொரு மகனை நோக்கி மாந்தனை உனக்கோர் வேதம் பெற்றதும் உண்டோ? சொல்வாய்! பேரதும் உரைப்பாய் என்றேன்; |