பக்கம் எண் :

94கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

உற்றெனை உருத்து நோக்கி,
       “உலகெலாம் உய்யும் மார்க்கம்
தெற்றென உணர்த்தும் வேதம்
       திருக்குரான் எமதே” என்றான்.

சிந்தனை முகத்தில் தேக்கிச்
       சென்றிடும் பொழுதில் என்முன்
வந்திடும் ஒருவற் கண்டேன்;
       வணங்கிய அவனை நோக்கிச்
செந்தமிழ் மகனே நின்றன்
       சீர்மறை சொல்வாய் என்றேன்;
“விந்தைகள் மிகுந்து தோன்றும்
       விவிலியம் எமதே” என்றான்.

உருக்கிடும் தமிழிற் சொன்ன
       ஒருமறை அறியா ராகி
*அருத்தியில் தழுவிக் கொண்ட
       அயலவர் மறையே சொன்னார்;
திருக்குறள் எங்கள் வாழ்க்கைத்
       திருமறை என்று கூற
ஒருத்தரை இங்குக் காணேன்
       உய்யுமோ தமிழர் நாடு?

20.7.1978


*அருத்தி - விருப்பு