28 வள்ளுவர் உலகில் 1. கடவுள் உலகங்கள் ஏழென்பர்; இல்லை என்றே உரைப்பவர் இன்றுமுளர்; அதனால் இங்குக் கலகங்கள் பலநிகழும்; எனினும் ஈண்டுக் கண்முன்னே பலவுலகங் காண்ப துண்மை; கலையுலகம், திரையுலகம், எழுத்தில் வல்லார் காணுலகம், பேச்சுலகம், வணிக வேந்தர் உலவுகிற தொழிலுலகம், கற்ப னைக்குள் உதித்துவரும் உலகமெனப் பலவும் உண்டு. உள்ளமுறும் நினைவலைகள் வீசும் பாங்கில் உலகங்கள் பலதோன்றும்; அதுபோல் இங்கு வள்ளுவனார் ஓருலகம் படைத்துத் தந்தார்; வாய்மைநெறி பல கூறி எனையழைத்தார்; துள்ளிவரும் பெருமகிழ்வால் அவர்பின் சென்று தூயதொரு வாழ்வுதரும் உலகங் கண்டேன் தெள்ளுதமிழ்ப் புலவன்றன் உலகிற் கண்டு தெரிந்தவற்றுள் சிலவற்றை எடுத்துச் சொல்வேன். அப்புலவன் பேருலகில் கோவில் எங்கே அமைந்துளது? கண்டுகளி கொள்வோம் என்றே எப்புறமும் திரிந்தலைந்தும் காண வில்லை; எழிற்கோவில் நினைப்பவர்தம் மனமே என்று செப்புகிற ஒலிகேட்டேன்; வியந்து நின்றேன் செம்பொருளின் திருவுருவங் காண எண்ணி |