பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்95

28
வள்ளுவர் உலகில்

1. கடவுள்

உலகங்கள் ஏழென்பர்; இல்லை என்றே
       உரைப்பவர் இன்றுமுளர்; அதனால் இங்குக்
கலகங்கள் பலநிகழும்; எனினும் ஈண்டுக்
       கண்முன்னே பலவுலகங் காண்ப துண்மை;
கலையுலகம், திரையுலகம், எழுத்தில் வல்லார்
       காணுலகம், பேச்சுலகம், வணிக வேந்தர்
உலவுகிற தொழிலுலகம், கற்ப னைக்குள்
       உதித்துவரும் உலகமெனப் பலவும் உண்டு.

உள்ளமுறும் நினைவலைகள் வீசும் பாங்கில்
       உலகங்கள் பலதோன்றும்; அதுபோல் இங்கு
வள்ளுவனார் ஓருலகம் படைத்துத் தந்தார்;
       வாய்மைநெறி பல கூறி எனையழைத்தார்;
துள்ளிவரும் பெருமகிழ்வால் அவர்பின் சென்று
       தூயதொரு வாழ்வுதரும் உலகங் கண்டேன்
தெள்ளுதமிழ்ப் புலவன்றன் உலகிற் கண்டு
       தெரிந்தவற்றுள் சிலவற்றை எடுத்துச் சொல்வேன்.

அப்புலவன் பேருலகில் கோவில் எங்கே
       அமைந்துளது? கண்டுகளி கொள்வோம் என்றே
எப்புறமும் திரிந்தலைந்தும் காண வில்லை;
       எழிற்கோவில் நினைப்பவர்தம் மனமே என்று
செப்புகிற ஒலிகேட்டேன்; வியந்து நின்றேன்
       செம்பொருளின் திருவுருவங் காண எண்ணி