பக்கம் எண் :

வீரகாவியம்261

இயல் - 1

முனைப்பாலும் நினைப்பாலும் பகைமை விஞ்சி
      மூவகமும் நாவலமும் முரணி நிற்கும்.

விண்தொட்டு முகில்மணந்த மலைமு கட்டின்
      வெண்ணிறத்துப் பனித்திரள்கள் உருகி நீராய்ப்
பண்பட்ட இசையெழுப்பி அருவி யாகிப்
      பாறையெலாம் முழவொலிக்கப் பாய்ந்து வீழ்ந்து
மண்தொட்டுச் சென்றுநில மகளைக் கூடும்;
      மனமகிழப் பொன்கொழித்து வளங்கள் காட்டும்;
தண்ணிட்டு லிரைந்துசெலும் புனலா றென்னும்
      தனிப்பெயரைத் தாங்குமது வையங் காக்கும்.1

காக்கின்ற புனலாற்றின் தென்பு றத்தே
      கடிமதில்சூழ் மூவகமென் றொருபேர் தாங்கும்
தேக்குபுகழ்த் திருநாடுவிளங்கித் தோன்றும்;
      திசையெட்டும் அந்நாட்டை வணங்கி நிற்கும்;
பூக்கின்ற மலர்தோய்ந்து தென்றல் வீசப்
      பொழிநறவந் திரண்டோடும் பொழில்கள் சூழும்;
தேக்குமணி மாளிகைகள் நிவந்து நிற்கும்
      தெருவனைத்தும் நீண்டகன்றே எழிலைக் கூட்டும்.2

கலகலவென் றொலித்துமரம் தலைய சைக்கக்
      காற்றுலவுங் கனிச்சோலை சூழும் நாடு;
சலசலவென் றார்த்தருவி இறங்கும் சாரல்
      சந்தனமும் அகில்தேக்கும் காட்டும் நாடு;


தண்ணிட்டு - குளிர்ந்து, நறவம் - தேன். நிவந்து - உயர்ந்து. கடிமதில் - காவல் பெருந்திய மதில்.