பக்கம் எண் :

276கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

பாரகத்தை நடுங்குறுத்தும் மடங்கல் போன்றான்
      பகரரிய பெருவீரன் வருகை கேட்ட
ஊரகத்து மாந்தரெலாம் குழுமி யாண்டும்
உவகையொடு வாழ்த்தொலிகள் எழுப்பி நின்றார்;
தாரடுத்த மார்பகத்தான் களிற்றின் மேலான்
      தலைநிமிர்ந்த தோற்றத்தான் வலமாச் சுற்றிக்
காரடுத்த தலைவாயி லுட்பு குந்தான்;
      கண்விழித்துக் கண்டவர்கள் வியந்து நின்றார்.34


குழுமி - கூடி, தார் - மாலை, கார்- மேகம்.