பக்கம் எண் :

288கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

திருவுருவப் படமதனில் வைத்த கண்ணைத்
      திருப்பாமல் இமைக்காமல் விழித்து நோக்கி
இருவிழியும் கனியிதழும் நிலவை வென்ற.
      எழில்முகமும் சுருள்குழலும் வியந்து நின்றான்.61

‘பனிவிழிகள் நாணத்தின் குழைவு காட்டிப்
      பருகுமெனைப் பாடுறுத்தித் துயரில் வாட்டும்;
கனியிதழ்கள் பவளத்தின் செம்மை காட்டிக்
      காணுகின்ற என்னுளத்தில் வெம்மை கூட்டும்;
நனிபொழியும் எழில்முகத்தை, முறுவல் பூக்கும்
      நளினத்தை, விழிக்கடையைச் சாயல் தன்னை
வனையுமவன் பரிசில்பெற வரைந்தா னல்லன்;
      வாட்டிஎனைத் துயர்ப்படுத்த வனைந்தான்’ என்றான். 62


நளினம் - இங்கிதம். வனையுமவன் - ஓவியன்