| 290 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
கொவ்வையிதழ் காணுங்கால், பெண்மை விஞ்சு கோதையர்க்கும் வாயூறும்; விழிகள் கண்டால் நவ்வியினம் வணங்கிவரும்; தோள்கள் காணின் நங்கையரும் மயங்கிடுவர் தமைம றந்தே!65 நாடாளும் பலமன்னர் மணப்பான் வேண்டி நான்நீஎன் றடுத்தடுத்தெம் நாட்டில் வந்து கூடாரம் அடித்ததுதான் மிச்சம் அந்தோ! கூடாகி ஓடாகித் தம்மூர் மீண்டார்; கூடாது திருமணமே எனம றுத்துக் கோலமயில் இளவரசி கூறி விட்டாள்; சூடாத மலர்பூத்த பருவ மங்கை சூடுபெயர் வேல்விழியாம் ஐய!’ என்றாள்.66
நவ்வி - மான் |