இயல் - 20 இளவரசி மனங்கவர்ந்த வீரன் இந்த வேழன்தான் எனமொழிந்தாள்; அவன்ம கிழ்ந்தான் ‘மங்கையவள் மனக்கோயிற் றெய்வ மான மாவீரன் யாவனவன்? மன்றல் கொள்ள இங்கவன்போற் பேறுடையான் ஒருவ னில்லை; ஏங்குதற்குப் பிறந்தவரை ஏங்க விட்டாள்; பொங்கிவரும் எழிலுருவப் பூவை நெஞ்சுட் புகுந்தவனோர் நிகரில்லா வீரன் என்றாய்! எங்குளனோ அவ்விளைஞன்? போரில் என்றன் எதிர்நிற்கும் நெஞ்சினனோ? மொழிக’ என்றான்.72 ‘ஒருநாளும் தோல்வியவன் கண்ட தில்லை; உருத்தெழுந்தோர் நெடுநேரம் நின்ற தில்லை; வெருவாத மன்னரிலை அவன்பேர் கேட்டால்; வெற்றிமகள் அம்மறவன் தோளே வேட்டாள்; மருவாரைப் புறங்கண்ட வீர னேனும் மாதரசி ஒருத்திக்குத் தோற்று விட்டான்; பெருவாளை வயல்தாவும் மூவ கத்துப் பெருநாடே அவன்நாடாம்’ எனமொ ழிந்தாள்.73 என்றமொழி செவிபுகுதா முன்னர் வீரன் இருவிழியும் சிவந்தெழுந்தான் ‘என்றன் நாட்டில் வென்றியல தொன்றறித லின்றி எங்கும் விஞ்சுபுகழ் கொண்டுவரு மென்னை வெல்லும்
வேட்டாள் - விரும்பினாள், மருவார் - பகைவர். |