பக்கம் எண் :

வீரகாவியம்293

இயல் - 20

இளவரசி மனங்கவர்ந்த வீரன் இந்த
வேழன்தான் எனமொழிந்தாள்; அவன்ம கிழ்ந்தான்

‘மங்கையவள் மனக்கோயிற் றெய்வ மான
      மாவீரன் யாவனவன்? மன்றல் கொள்ள
இங்கவன்போற் பேறுடையான் ஒருவ னில்லை;
      ஏங்குதற்குப் பிறந்தவரை ஏங்க விட்டாள்;
பொங்கிவரும் எழிலுருவப் பூவை நெஞ்சுட்
      புகுந்தவனோர் நிகரில்லா வீரன் என்றாய்!
எங்குளனோ அவ்விளைஞன்? போரில் என்றன்
      எதிர்நிற்கும் நெஞ்சினனோ? மொழிக’ என்றான்.72

‘ஒருநாளும் தோல்வியவன் கண்ட தில்லை;
      உருத்தெழுந்தோர் நெடுநேரம் நின்ற தில்லை;
வெருவாத மன்னரிலை அவன்பேர் கேட்டால்;
      வெற்றிமகள் அம்மறவன் தோளே வேட்டாள்;
மருவாரைப் புறங்கண்ட வீர னேனும்
      மாதரசி ஒருத்திக்குத் தோற்று விட்டான்;
பெருவாளை வயல்தாவும் மூவ கத்துப்
      பெருநாடே அவன்நாடாம்’ எனமொ ழிந்தாள்.73

என்றமொழி செவிபுகுதா முன்னர் வீரன்
      இருவிழியும் சிவந்தெழுந்தான் ‘என்றன் நாட்டில்
வென்றியல தொன்றறித லின்றி எங்கும்
      விஞ்சுபுகழ் கொண்டுவரு மென்னை வெல்லும்


வேட்டாள் - விரும்பினாள், மருவார் - பகைவர்.