எனமொழிந்த தோழியுரை கேட்டான் வீரன் இறும்பூது மீக்கூர நிலைத்து நின்றான்; முனமெழுந்த சினமடங்கி, ஆங்கு நின்ற மொய்குழலி முகம்நோக்கி நகைத்துக் கையால் தினவெழுந்த தோள்தட்டி ஆர்த்த ஓசை திசையெங்கும் மோதிஎதிர் ஒலிக்கக் கேட்டான்; முனமடைந்த வென்றிகளிற் காணா இன்பம் மொய்ம்புடையான் நெஞ்சத்துட் புகுதக் கண்டான்.78 |