300 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
வியந்திருக்கும் தோழியின்பால் ஓடி வந்து விளையாட்டுப் பிள்ளைஎனக் கன்னங் கிள்ளி, ‘நயந்தவனை நானடையும் பேறு பெற்றேன்; நற்றவத்தின் பயன்நுகரும் வாழ்வு பெற்றேன்; உயர்ந்ததொரு பேறிதன்மேல் உண்டோ? தோழி! ஒளிவிளக்கை என்னுளத்தில் ஏற்றி விட்டாய்! பயந்தவரும் இசைந்துவரச் செய்தல் நின்றன் பாரமடி நேரமிது நல்ல’ தென்றாள்.89
பயந்தவர் - பெற்றோர், |