இயல் - 23 பொய்கைக் கரைதனிலே-மாலைப் பொழுது வருகையிலே-வேழன் செய்கை எலாமுணர்ந்தே - சென்று தேர்ந்திடு கென்றுரைத்தாள். ‘உயிரனையாய்! எனைக்கவர்ந்த காத லற்கண் டுரையாட வேண்டுமென உள்ளம் சற்றே மயலடையா நின்றதடி; நாணம் வந்து மறுத்துரைத்துங் கேட்கவிலை நானென் செய்வேன்! கயல்விழியோ உள்ளத்தை முந்தும் போலும் கண்டன்றித் துயிலில்லை என்று நிற்கும்; செயலறியேன் எதைச்சொல்வேன் எதைத்த டுப்பேன் செந்நெறியொன் றுரைப்பதுநின் கடனே’ என்றாள்.90 பொறுமையுடன் உரையனைத்துங் கேட்ட தோழி புன்முறுவல் செய்துசில மொழிவாள், ‘அன்னாய்! நறுமலரின் மணமாலை சூடும் நுங்கள் நடுவினில்யான் ஊசலென ஆடு கின்றேன்; மறுபகலின் கதிரவன்போய் மறையும் வேளை மலர்வனத்து வாவியின்பால் வேழன் தன்னை வருகவெனச் சொல்லிவந்தேன்; ஆங்கு நின்கை வரிசையெலாம் காட்டுதி’ என் றகன்று சென்றாள்.91
மயல் - மயக்கம், வாவி - பொய்கை |