304 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் - 25 காதலர் நெஞ்சம் களிப்புறச் செய்யும் போதலர் மாலைப் பொழுதும் வந்தது. கருத்தொருமை கொண்டிருவர் தம்முட் கூடிக் கலந்துளத்தைப் பரிமாறுந் தலைக்கூட் டத்திற் குருக்கமுடன் துடித்திருக்கும் பொழுதில், நாமேன் ஊறாக நின்றிருக்க வேண்டு மென்று கருத்ததனிற் செய்யவனும் நினைத்தான் போலக் கடுகிவிரைந் தோங்குமலைத் தொடர்ப்பு றத்தே உருக்கரந்து கதிர்சுருக்கி மறைந்து விட்டான்; உலகியலின் திறமுணர்ந்தோர் செயலே செய்தான்97 களவியலில் பயின்றுவரும் காத லர்க்குக் காலமெலாந் துணைநிற்கும் மாலைக் காலம், உளவியலை நன்குணர்ந்தோன் செய்கை போல உணர்ச்சியினால் ஒன்றுபடும் இருவர் தம்முட் பழகிடவந் துதவியது; மயங்கும் அந்தி பாரெங்கும் பரவியது; காமுற் றாரின் இளமையுளம் சிறகடித்துப் பறந்து செல்ல இறகொடுக்கி அடங்கினவே புள்ளி னங்கள்.98 |