மனையடையும் நேரம்மிக ஆயிற் றென்று மதிவந்து முகங்காட்டப் பிரிந்து செல்லத் தினையளவும் மனமிலராய் விலகிச் சென்றார்; திருமணத்து நினைவுடனே துயிலச் சென்றார்.117 நஞ்சுமிழும் முழுமதியை வானிற் கண்டார்; நலிவுதரும் தென்றலெனும் காற்றைக் கண்டார்; பஞ்சணையின் பெயராலே விரித்து வைத்த பாழ்நெருஞ்சிப் பரப்பினையே அங்குக் கண்டார்; விஞ்சுமணப் புகைபரவ, வெய்து யிர்த்து விடும்புகையாய் அதுபரவிச் சூழக் கண்டார்; வெஞ்சரமாய்ப் பூச்சரங்கள் தெரியக் கண்டார்; விழிகுவியாக் கனவுலகில் மிதந்து சென்றார்.118 காட்சிப்படலம் முற்றும்.
சரம் - அம்பு |