பக்கம் எண் :

314கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 30

தந்தையின்பால் தூதுரைத்து மீள்க என்று
தலைத்தோழி தனையனுப்பி நின்றாள் மங்கை.

படியினுக்குள் புதுமலர்ச்சி பரவக் கண்டு
      பாவைமனம் புத்துணர்ச்சி நிரம்பக் கொண்டாள்;
கொடியிருக்கும் மலரனைத்தும் கூந்த லுக்குள்
      குடியிருக்கும் படிவைத்தாள்; தோழி தன்னைக்
கடிதழைத்தங் கருகமர்த்தி நெருநல் மாலை
      கரைகாணாக் கனவுலகில் வீர னோடு
கொடிபிடித்துக் கற்பனைத்தேர் ஊர்ந்த வெல்லாம்
      குறையாமல் சிதையாமல் உரையா நின்றாள்.121

‘எனையளித்த தந்தைக்குச் செய்தி சொல்லி
      எதிர்மறையால் விடையின்றி உடன்பா டாக்க
முனைவதுநின் கடனாகும்; நீநி னைத்தே
      முயலுவையேல் முற்றாகும் எச்ச மில்லை;
நினைவிடுத்தால் எனக்குதவ யாரே உள்ளார்?
      நேரிழையே நின்பெயரை வாழ்த்தி நிற்பேன்
வினைமுடித்துத் திரும்’பெனவேல் விழியு ரைத்தாள்;
      வேண்டுதியோ உடன்படுமெய்’ என்றாள் தோழி.122

‘கலக்கத்தாற் குழம்புமெனை விளங்கக் கூறிக்
      கனிமொழியால் தெளிவுறுத்த முனைத லின்றி,
இலக்கணத்தாற் குழப்புகின்றாய்! புரிந்து கொள்ள
      இந்நிலையில் இயலுவதோ?’ என்றாள் செல்வி;


படி - பூமி நெருநல்-நேற்று 122ஆம் பாடலில் இலக்கணச் சொற்கள் நயம்பட வந்துள்ளன.