பக்கம் எண் :

வீரகாவியம்315

‘குலக்கொழுந்தே! உயிரிரண்டு கூடுங் காலைக்
      கூட்டுவிக்கும் உடன்படுமெய் போல உங்கள்
இலக்குடைய உயிரிரண்டைக் கூட்டு விக்கும்
      எழில்மணத்தை அப்பெயராற் குறித்தேன்’ என்றாள்.123

‘புணர்ச்சிக்கு விதிசொல்ல வல்லாய்! எங்கள்
      புணரியற்கும் விதிசெய்ய வேண்டும்; தந்தை
உணர்ச்சிக்கு வயமாகி மறுக்கா வண்ணம்
      உரைக்குமுறை யாலுரைத்து, வீரனுக்கே
இணர்த்தொடையல் நான்சூட்டி மணமே கொள்ள,
      இசைவிப்பாய்; என்னுயிர்நின் கையிற் றந்தேன்;
துணர்க்கொடியின் இடையுடையாய்! தூதுசென்று
      துணைதருமோர் மங்கலச்சொற் கொணர்க’ என்றாள்.124


உடன்படுமெய் - இரண்டு உயிரைச் சேர்த்து வைக்கும் மெய்யெழுத்து, புணர்ச்சி இலக்கணப்புணர்ச்சி
புணரியல் - தலைவன் தலைவியர் கூட்டம் இணர்த்தொடையல் - பூங்கொத்து மாலை துணர் - பூங்கொத்து.