‘நேரிழையே என்மனத்தை உருக்கி விட்டாய்! நெறிதடுமா றாவண்ணம் திருப்பி விட்டாய்! ஆருயிர்போல் வளர்த்தவளைத் தகுதி யில்லா ஆருக்கோ கொடுப்பதெனின் பெற்ற நெஞ்சம் கூரெரியின் மெழுகாகி நையு மன்றோ? குழம்புமெனை என்செய்யக் கூறு கின்றாய்? சீரெதுவோ அதுசெய்ய ஒப்பு கின்றேன்; சிறியவட்கு மணமுடிந்தாற் போதும்’ என்றான்.140 |