328 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் - 38 வயத்தரசன் வேண்டுமொரு வாய்மொ ழிக்கும் மாவேழன் மனமுவந்தே இசைவு தந்தான். புலர்காலைப் பொழுதத்தின் வரவு கண்டு பூரித்த வயத்தரசன் விரைந்து சென்று மலர்மாலை வயங்கிருதோள் வேழற் கண்டு மகளைமணங் கொள்கவென வேண்டி நின்றான்; ‘நலமாரும் என்புரவி தேடி வந்தேன் நான்தருவேன் நின்துணையை* என்று ரைத்தாய்! பலர்சூழ உரைத்தமொழி வாய்த்த தைய! பாவையைஎன் துணையாகக் கொள்வேன்’ என்றான். 157 ‘பெருவலியன் ஒருவனைஎன் மருக னாகப் பெறுவதன்மேல் மகிழ்வுளதோ? ஆனால் நீதான் சிறியஒரு வாக்குறுதி தருதல் வேண்டும்; சீறுபகை கொண்டிரண்டு நாடுந் தம்முள் பொருநிலையை எய்துமெனில் இவள்தான் இந்தப் பொன்னாட்டை விட்டகலல் கூடா’ தென்றான்; திருமகளை மருவுவதில் மயங்கி நிற்கும் திண்ணியனவ் வுறுதிமொழிக் கிசைவு தந்தான்.158
*54ஆம் பாடலை நோக்குக. |