பக்கம் எண் :

வீரகாவியம்337

காய்ச்சியநல் லாவின்பால் கொண்டு வந்து
      கைக்கொடுத்தாள் உயிர்த்தோழி; பாலை வாங்கி
வாய்ச்சிறிது வார்த்தவுடன் கடிந்து கொண்டாள்;
      வாழ்கின்றார் காதலர்தாம் எனது நெஞ்சுள்,
போய்ச்சுடுமென் றறியாயோ? விஞ்சும் சூடு
      போகாமல் கொணர்ந்தனையே! போபோ என்று
வேய்ச்சிறுமென் தோளுடையாள் சினந்தாள் ஓர்நாள்;
      வேறறிய வொண்ணாமல் ஒன்றி நின்றாள்.181