342 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
என்றவள்தன் மனத்தகத்தே எண்ணிக் கொண்டாள்; இரும்பனைய மாவேழன் நாள்கள் எண்ணித் துன்றமரில் பொருதுவரும் மகனைக் காணத் துயிலாத பெருங்கனவு கண்டி ருந்தான்; என்றுவரும் என்றுவரும் அந்த நன்னாள் எனவேங்கி இருவருமே நோக்கி நிற்க, ஒன்றொன்றாய் நாள்வளர உரிய காதல் ஒளிவிளக்கம் அவள்வயிற்றில் வளர்ந்த தம்மா!196 |