344 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
மென்புறத்தைத் தைவந்து, கையி ரண்டால் மெல்லியலைக் கைப்பற்றி, அவள்மு கத்தைத் தன்விரலால் மேல்நிமிர்த்திப் பிரிவை நெஞ்சம் தாங்காமல் கண்பொழியும் நீர்து டைத்தான்; அன்புதவழ் இருவிழியால் அவளை நோக்கி அலர்பொதியும் கார்குழலைக் கோதி விட்டான்; தன்புதிய வாழ்வுக்குத் துணையாய் நின்ற தையலுக்குக் கனிமொழிகள் பலவு ரைத்தான். 200
தைவந்து - தடவி, கார்குழல் - கரியகூந்தல் |