பக்கம் எண் :

வீரகாவியம்353

எனக்குமவன் தாய்நாடு தனக்கும் நெஞ்சுள்
      இடமளித்தான் சமமாக; பெற்ற நாடு
தனக்குமொரு நிகர்பங்கே செய்து தந்தோன்
      தாய்நாடு துயருறுங்கால் தரியா னாகி
முனைத்தெழுந்து களஞ்சேர்தல் முறைமை யன்றோ?
      மூவகத்தான் பிரிவாற்ற இயலே னாகிப்
பினற்றுகின்ற நிலைக்கிரங்கி அவற்ப ழித்தாய்!
      பேதையினி அப்பிரிவைப் பொறுப்பேன்’ என்றாள்.225