356 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் - 52 வேல்விழிக்குப் பெண்மகவு பிறந்த தென்று வேழனுக்கு வயத்தரசன் தூது விட்டான்! குலக்கொடியாம் தன்மகட்கு மகன்பி றக்கக் கூர்மகிழ்வு வயத்தரசன் கொண்டா னேனும் கலக்குறுத்தும் பெரும்பகையால் இரண்டு நாடும் கடும்போரில் ஈடுபட்டு நிற்ப தாலே பலர்க்குரைத்துத் திருநாள்கொண் டாட வில்லை; பாலகன்றன் வெள்ளணிநாட் சிறப்பை எல்லாம் இலக்கணநூற் பாவென்னச் சுருக்கிக் கொண்டான்; இன்பமெலாம் மறைபொருளா அடக்கிக் கொண்டான்.231 ஒருமகனாம் முதல்மகன்றான் பிறக்கும் போழ்தே ஓராண்டுப் பருவத்தன் போலி ருந்தான்; நறுமலரின் மலர்ச்சிஎன முகம்ம லர்ந்து நாளெல்லாம் சிரித்திருக்கும் கார ணத்தால் முறுவலனென் றொருபெயரால் அழைத்து வந்தார்; முன்பொழுதின் பின்பொழுது மேனி வண்ணம் பெருகிவர வளர்ந்துவர ஒளிமி குந்து பேரழகுப் பறழ்புலிபோல் வளர்ந்து வந்தான்.232 மகன்பிறந்த மகிழ்ச்சியினைத் தந்தை யான மாவேழற் குணர்த்துவலென் றுள்ளங் கொண்டு மகள்வயினவ் வயத்தரசன் எடுத்து ரைத்தான்; மங்கையவள் அம்மொழிக்கு மறுப்பு ரைத்தாள்; ‘மகனெனவே செய்திசொலி அனுப்ப வேண்டா மைந்தனென அறிந்துவிடின் முறுவல் பூத்த முகனிவனைத் தன்னகர்க்கே எடுத்துச் சென்று முனைமுகத்துக் கிடந்திடுவான் போரில் வல்லான்.233
வெள்ளணிநாள் - பிறந்தநாள். முறுவலன் - புன்னகையுடையவன் பறழ்புலி - புலிக்குட்டி |