360 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
வேட்டைஎனிற் பெருவிருப்பம்; கான்வி லங்கின் வேந்தனெனில் தனிவிருப்பம்; முழக்கம் ஒன்று கேட்டுவிடின் உருமுழக்கம் இவனும் செய்வான்; கிளர்ந்தெழுவான்; ஆதலினால் இளைஞ ரெல்லாம் வேட்டெழுந்து படையென்னத் திரண்டு தம்முள் வீரனிவன் தலைவனெனத் தேர்ந்து கொண்டார்; காட்டுகின்ற பெருவலியால் கார்மு ழக்கால் கண்டவர்தாம் கோளரிஎன் றழைக்க லுற்றார்.244
உரும் முழக்கம் -இடிமுழக்கம். |