பக்கம் எண் :

378கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

பணிவோரை ஒருநாளும் கொல்ல ஒவ்வேன்
      பகைஎனினும் பிழைத்துப்போ!’ என்று கூறிப்
பணியாளர் தமையழைத்துக் ‘கோடன் கையில்
      பற்றுவிலங் கணிவித்துக் கொண்டு செல்க!
துணிவாளன் இவனைஒரு காவல் செய்க!
      துயரேதும் தாராமல் பேணு’ கென்று
தணியாத திறலுடையன் ஆணை யிட்டான்;
      தாள்பணிந்தவ் வேவலர்தாம் கொண்டு சென்றார்.290

பொருகளத்தில் நகர்த்தலைவன் தோல்வி கண்டான்;
      பொருதலர்முன் இறந்திலனாய் இரந்தான் என்ற
அருவருக்கும் புன்மொழிகள் நகர மெங்கும்
      அலராகிப் பரவியது; பெண்ணும் ஆணும்
‘சிறுபகைவற் காற்றாமல் தோற்றுப் போன
      சீரிழந்த வெண்கோடன், உயிருக் காக
உறுபகைக்குப் பணிந்துவிட்டான் மான மில்லான்
      உலுத்த’னென ஊரெல்லாம் வெறுத்து ரைத்தார்.291


துணிவாளன் என்றது எள்ளற் குறிப்பு, அலர் - பழிமொழி