பக்கம் எண் :

வீரகாவியம்383

அரிவைஎனப் பிறந்தனைநீ! செங்க ளத்தில்
      ஆடவரோ டமர்புரிதல் ஒல்வ தாமோ?
உரிமைஎனக் கூறுவைநீ! ஒவ்வேன் ஒவ்வேன்;
      உடலமைப்பின் இயல்புணர்ந்து நடத்தல் வேண்டும்;
அரியசெயல் பலசெய்தல் இயல்வ தேனும்
      அமர்புரிதல் முறையன்று பேதாய்’ என்றான்;
புரிசமரில் பலர்முன்னர்த் தோல்வி காணப்
      புழுங்கினள்நெஞ் சழுங்கினளப் பூவை நல்லாள்.301