பக்கம் எண் :

390கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் 70

மறுநாள் கோட்டை வாயிலுட் புகுந்தோன்
பொருவாள் விழிமகட் கண்டிலன் புலம்பினன்.

துயிலரசு செயுமிரவு புறந்தந் தோடத்
      துதையிருளின் வாய்பிளந்து கதிரோன் தோன்ற
அயிலரசின் இலைவேலான் படைதி ரட்டி
      ஆர்ப்பரித்து வெண்கோட்டை வாயில் சார்ந்தான்;
எயில்வளையும் நெடுங்கதவின் வாய்பி ளக்க
      இடித்ததனுட் புலிபோலப் பாய்ந்து சென்றான்;
பயில்பவரங் கொருவருமே காணா னாகிப்
      பகரரிய ஏமாற்றங் கொண்டு நின்றான்.318

காணாருங் கேளாருங் கூனர் தாமும்
      கைகால்கள் முடமாகிச் செயல்செய் யாரும்
பேணார்தங் கோட்டைக்குள் இருக்கக் கண்டான்;
      பேருலையின் வெய்துயிர்த்தான்; வீரம் ஒன்றே
பூணாகக் கொண்டவளைத் தனது நெஞ்சுட்
      புக்கதனைக் கவர்ந்தவளைத் தேடித் தேடிக்
காணாமல் பதைபதைத்தான்; ஏதோ ஒன்று
      கவ்வியது போல்மனத்தில் துடிது டித்தான்.319

இகழ்ந்துரைத்த மாற்றமெல்லாம் மறந்து போனான்;
      எழிலணங்காம் அவள்மீது மையல்ஆனான்;
திகழ்ந்திருக்கும் அவளழகில் சொக்கி நின்று
      சிறைப்பட்டான் இவனன்றி அவளோ இல்லை;
அகன்றிருக்கும் நெடுவேலால் காயம் செய்தான்
      அவள்மார்பில்; அஃதாற மருந்தும் உண்டு;
வகிர்ந்திருக்கும் வடுவிழியால் பட்ட காயம்
      மாறுதற்கு மருந்தின்றித் தவித்தி ருந்தான்.320


துதை - செறிந்த, அயில் - கூரிய, அரசின்இலை - அரசமரத்திலை, எயில் - மதில், பயில்வர் - வாழ்பவர். உலையின் - உலையைப்போல.