முனைமுகத்து மானத்தி தொடுத்து விட்ட மொய்ம்புமிகு கணையெல்லாம் தடுத்து விட்டான்; நனைமுகத்து மலர்க்கணையைத் தடுத்தல் ஆற்றான் நலிவுமிகச் சுழன்றடிக்கும் புயலிற் சிக்கிக் கனைகடற்கண் தடுமாறும் கலமே போலக் கையற்று நிலைகலங்கித் தளர்ந்தி ருந்தான்; நினைவகத்து நில்லாமல் உழல்வோற் கண்டு நிகழ்ந்ததனை மாவலியன் வினவி நின்றான்.321
நனை - தேன். கனைகடல் - ஒலிக்கின்றகடல், கலம் - மரக்கலம். கையற்று - செயலற்று. |