| 392 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் - 71 மானத்தி நினைவதனால் வாடு வோனை மாவலியன் இடித்துரைத்து மறக்கச் சொன்னாள். விடையெதுவும் துயருறுவோன் தாரா னேனும் விழைந்ததனைப் பளிங்கேபோல் எடுத்துக் காட்டும் விடையனையன் முகத்துறுப்பால் கண்டு கொண்டான்; ‘வீரநினக் கொன்றுரைக்கக் கடவன் கேண்மோ! கடைவிழியிற் கட்டுறுத்தும் மகளிர் கொண்ட கட்டழகும் பற்றுளமும், இன்று பூத்து நடைமுறையில் இதழ்விரித்து நாளை வாடும் நலமுடைய மலரனைய இயல்பே கொள்ளும்.322 போர்விழைவோர் காதலெனும் மலருள் மூழ்கிப் பொன்றிவிழும் வண்டாகார்; போரில் வெற்றித் தார்விழையும் நினைவுடன்தான் ஈங்கு வந்தோம்; தையலரால் கடன்மறந்து திரிதல் நன்றோ? கார்விழையும் கூந்தலுக்கு மயங்கி நின்றோர் கடும்போரை வென்றதிலை; உண்மை வீரர் ஏர்விழையும் காமமெனும் வலையிற் சிக்கி இடருக்குள் தாமேபோய் வீழ்ந்து சாகார்.323’ தலைவனென உனைநம்பி வந்தோம்; இங்குத் தரியலர்தம் நாட்டழகி ஒருத்திக் காக அலையுமனம் நீகொண்டாய்! மூவ கத்தை அருஞ்சமரில் வென்றுவிடின் அதன்மேல் நீதான் கலையுலகம் புகுந்திடலாம்; காதல் வாழ்வில் களித்திருந்து திளைத்திடலாம்; தடுப்பா ரில்லை; மலைவரிய கோளரியின் வீர மெல்லாம், மாண்பெல்லாம் வீணாகப் போதல் நன்றோ?324
ஏர் - அழகு, மலைவரிய - எதிர்க்க முடியாத |