வீரந்தான் விரும்புதியோ? காதல் ஒன்றே மேலாக விழைந்தனையோ? இரண்டில் ஒன்றைத் தேருங்கால் மற்றொன்றை விடுதல் வேண்டும்; சேயிழையின் காதலொன்றே வேண்டு மென்றால் பாரஞ்சும் கைவாளைத் தரையில் வீசு! பணிந்துவிடு மாற்றலர்க்கு! வீர மென்றால் போரஞ்சாத் திறல்காட்டு! வாளைத் தூக்கு! புகல்மறவன் கோளரியின் பெயரை நாட்டு!’’325 |