396 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
மீளியிவன் எதிர்நிற்கும் ஆற்ற லுள்ளார் வேழனன்றி ஒருவரிலர்; கோட்டை தன்னை நாளையழித் தொழிப்பனென வஞ்சி னத்தான் நவின்றுள்ளான்; வேழனும்வந் துதவி செய்ய வேளையிது போதாது; வீரன் வந்து விடலையொடு பொருவனெனக் காத்து நிற்பின் ஆளியிவன் வாளுக்கே இரையாய் வீழ்வோம்; ஆதலினால் சுருங்கைவழி தப்பி விட்டோம்’.331
மீளி - வீரன். விடலை - தலைவனாகிய கோளரி, ஆளி - சிங்கம் போன்ற விலங்கனைய கோளரி. |