பக்கம் எண் :

400கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் 76

கோளரி யாரென ஐயங் கொண்டு
காளையை வேழன் கழறினன் வியந்தே.

எனவுரைத்த மொழிகேட்டு நின்ற வேழன்
      எல்லையிலா வியப்புற்றுத் திகைத்து நின்றான்;
‘கனவகத்தும் எனைப்பொருத நினைவோன் றன்னைக்
      கண்டதிலை நாவலத்தில் இந்நாள் மட்டும்;
எனைநிகர்க்கும் ஏந்தலென நுவலு கின்றான்;
      யாவனவன்? என்மனைவி வேல்வி ழிக்குத்
தனயனிலை பெண்மகவே பிறந்த தென்றாள்;
      தந்துரைத்த மொழிபொய்யோ?பொய்யோ சொல்வாள்!339

மகனென்றால் தனிமகிழ்வு கொள்ளுந் தாயர்
      மகளென்று பொய்மொழியத் துணிவார் கொல்லோ?
மகனென்றால் எனைத்தேடி வாரா தின்னும்
      மறைந்தங்கு வைகுவனோ? வந்தே சேர்வன்;
மகனென்றால் இவனன்றோ மகனே யாவன்;
      மகவெனக்குப் பெண்ணாகப் பிறந்த தந்தோ!
மகனிவன்றான் யாவன்?யாண் டிருந்து தோன்றி
      மல்லுக்கு வருகின்றான்? விந்தை! விந்தை!’340


ஏந்தல் - பெருமையிற் சிறந்தோன்,