404 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் - 79 வேந்தன் சுடுசொல் வேழன் கேட்டதும் காந்தும் மனத்தொடு கழறினன் வெகுண்டே. காவலன்றன் ஆணைக்கங் கஞ்சி நின்ற காவலனும் சீயத்தை அணுகி வந்தான்; மேவலர்தம் படைநடுக்கும் வேழன் சீறி வீரனுக்கோர் அறைகொடுக்க, ஐயோ என்று நாவலற மெய்யதிர மயங்கி வீழ்ந்தான்; நாடாள்வோன் முகம்நோக்கிச் சூரன் சொல்வான், ‘காவலனே! நாட்டுக்கோர் பழியாய் வந்தாய்! கருத்தில்லாய்! பொறுப்பில்லாய்! கடமை யில்லாய்!348 என்னுயிரும் மதியாமல் போரில் உன்னை எத்தனையோ முறைகாத்தேன்; அதற்கோ என்னைச் சின்னவனைக் கொண்டவையில் இகழ்ச்சி செய்தாய்? செருக்கொண்டு சீறிவரும் பகைவ ருக்கு முன்னணுக மாட்டாமல் அஞ்சிச் சாகும் மொய்ம்புடையோய்! வாய்மதமோ பேசு கின்றாய்? உன்னையொரு கடுகளவும் அஞ்ச கில்லேன்; ஒருவருக்கும் அடிபணியேன்; வீரங் கொள்வேன்.349 நாட்டின்பால் கொண்ட தொரு வேட்கை யாலுன் நன்றியிலாச் செயலெல்லாம் பொறுத்து வந்தேன்; மாட்டின்பால் கறக்காமல் பயனே நல்கும் மடியறுக்க முனைகின்றாய்! எனைநீ யாட்டும் ஆட்டம்போல் அடங்கியுனக் காடி நின்றேன்; அஞ்சியன்று; தாய்நாடு போற்றும் ஆசை; வாட்டும்போ தடங்குவதால் மன்னா! என்றன் வலிமைஎலாம் ஓர்ந்திலையோ? உணர்வாய் நாளை. 350
அடவி - காடு |